ஆட்டிசம் என்பதை தமிழில் தற்புனை ஆழ்வு /மதியிறுக்கம் எனச் சொல்லலாம்.அதாவது குழந்தை வெளிஉலகத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆழ்ந்து தனக்குத்தானே உறவாடிக் கொண்டு இருப்பதுதான் ஆட்டிஸம். இதுமன நோய் அல்ல ;மனவளர்ச்சி குறைபாடும் அல்ல. ஆட்டிசம் நோய் வருவதற்கு என்ன காரணம் என்பது உறுதியாகத் தெரியவில்லை .இது பாரம்பரிய,நரம்புஉயிரியல் பிரச்சனை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்ததில் இருந்தே எளிதில் காணமுடியாத குறைகளைக் கொண்டிருப்பார்கள். குழந்தை வளர வளர 15 -18 மாதங்களுக்குப் பிறகு உற்று நோக்கப்படும் போது சாதாரணமாக கண்டறியப்படுகிறது .அமெரிக்காவில் இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 63 இல் 1 என கணக்கிடப்பட்டுள்ளது இந்தியாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சரியாக யாருக்கும் தெரியாது
