பிஸ்கெட், சாக்லெட் ,சிப்ஸ், மென்பானங்கள் சாப்பிடாத குழந்தையும் இல்லை. தராத பெற்றோரும் இல்லை பிஸ்கட்டு தானே !அவசரத்துக்கு இருக்கட்டும்!!! என வீட்டில் வைக்காத பெற்றோரும் இல்லை !!எந்த ஒரு விழாவிலும் சாக்லெட் ஒரு முக்கிய இடம் வகிக்கும் .எந்த ஒரு உணவுக்கும் கடித்துக்கொள்ள சிப்ஸ் .தாகத்திற்கும் பயணத்தின்போதும் விழாக்காலங்களிலும் மென்பானங்கள். வீட்டில் தயாரிக்கும் உணவுகளை விட டப்பாக்களில் விற்கும் மாவுச் சத்து உணவுப் பொருட்கள் சிறந்தவை என்ற நம்பிக்கை காலம் காலமாக பரப்பப்பட்டும்நம்பப்பட்டும் வருகிறது. இவை உண்மைதானா?? இந்த நுண் பதப்படுத்தப்பட்ட பொருட்களை தொடர்ந்து உட்கொள்ளும் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனைகள் ஏற்படலாம் ??இதற்கு மாற்று என்ன??? இவ்வுணவுகளின் தீய விளைவுகளை தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்?
என்பதனை இக் காணொளியில் பார்ப்போம்
