ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது உழைக்கும் மக்களுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதைச் சாத்தியமாக்குவோம். அவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற குறிக்கோளை இந்த ஆண்டு முன்வைக்கிறது.அரசு பணியில் இருப்பவர்களுக்கு மகப்பேறுவுக்கு பின் வேலைக்குச் செல்லும் போது போதுமான நாட்கள் தாய்ப்பால் தர விடுப்பாகக் கிடைக்கிறது. தனியார் மற்றும் முறைசாராத் தொழில்களில் உழைக்கும் பெண்களுக்கு போதுமான மகப்பேறுவிற்குப் பின் விடுப்பு கிடைப்பதில்லை. எனவே தாய்ப்பால் கிடைக்கும் நாட்கள் குறைகின்றன. பல நேரங்களில் தாய்ப்பால் நிறுத்தப்பட்டு வேறு பால் தரப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் உடனடியாக தாய்ப்பால் தர வேண்டும். முதல் மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தந்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலமும் கிடைக்கும் அளவும் அதிகரிக்கும் எந்த வகையில் மகப்பேறு நடந்திருந்தாலும் உடனடியாகத் தாய்ப்பால் தரலாம். வேலைக்கு செல்லும்உழைப்பாளித் தாயாக இருந்தாலும் இரண்டு ஆண்டு வரை தாய்ப்பால் தர இயலும்.அதற்குப்போதுமான ஆதரவும் நேரமும் தாய்க்குத் தேவை. வீட்டில் மற்றும் வேலைசெய்யும் இடத்தில் தாய்ப்பாலைக் கறந்து எடுத்துப் பதப்படுத்தி வைக்கலாம். வீட்டிற்குப்போகும் போது குழந்தைக்குத் கறந்த பாலையும் நேரடியாகவும் தரலாம். பொது இடங்களில் இருந்து தனி இடம் சென்றுத் தாய்ப்பாலை தரலாம். கறந்த பாலை பால் புட்டியில் தராமல் கிண்ணத்தில் தருவோம். புட்டியின் வழியாக பரவும் நோய்களைத் தவிர்ப்போம் என்கிறது தாய்ப்பால் அமுதுப் பாடல்